நாம் அனைவரும் வாழ்க்கையை சந்தோசமாகவே அணுபவிக்க விறும்புகிறோம் ஆனால்
வெகுசிலரே அவர்களுடைய
உள்ளார்ந்த மகிழ்ச்சியின் நிலையை பற்றியும் அதை எவ்வாறு நிலை நிறுத்துவது என்பதை
பற்றியும் அறிந்து உள்ளனர். நம்முடைய புலன்கலும், சுய சார்ப்பு சிந்தனைகளும்
தொடர்ச்சியாக மகிழ்ச்சியாகவே இருக்கவே விரும்புகிறது. ஆனால் நம்முடைய
மகிழ்ச்சிக்கும் சந்தோசத்திற்க்கும் பின்னால் வலியும் துன்பமும் தான் உள்ளது.
துன்பமும் சந்தோசமும் பிரிக்கமுடியத பகலும் இரவும் மற்றும் ஒளியும் நிழலையும்
போன்ற இரட்டையர்கள். உன்மையான நிலை என்பது மகிழ்ச்சியும்
அமைதியும் இனைந்த இரட்டை நிலையே ஆகும்.
எவ்வாறு
இந்த இரட்டை நிலையை அடைவது?
நாம் நமது மனதை தியானத்தின் மூலம் எவ்வாறு
முறைபடுத்துவது என்பதை கற்றுகொள்ள வேண்டும். ஒரு சிலர் மட்டுமே தஙகளுடைய
மனதை எவ்வறு நன்றாக
பயன்படுத்துவது என்பதை அறிந்து உள்ளனர்.
இதில் துக்ககரமான செய்தி என்ன
என்றால் மனதானது பல்வேறு சிறு சிறு துகள்களாக பிரிந்து இருக்கிறது. இந்த துகள்கள்
அதிகமாக அதிகமாக குழப்பம் அதிகரிக்கும். எப்பொழுது நாம் மனதுகள்களை
சேர்த்து ஒன்றாக ஆக்குகிறோமோ அப்பொழுது தான் நம்முடைய மனம் தெளிவும், அமைதியும்
பெறும் என்பதே உண்மை.
முறைப்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கினைக்க பட்ட மனதால் மட்டுமே
எவ்வாறு வாழ்வது, எவ்வறு பல நிகழ்வுகளை பகுத்தாய்வது, நம்மை சுற்றி உள்ள மக்களுடன்
ஒற்றுமையாக வாழ்வது மற்றும் செயல்களை செய்வது என்பதையும் அறியமுடியும். எப்பொழுது
நாம் நம்முடைய மனதை ஒறுமுகப்படுத்தி அதை ஒரு கருவியாக பயன்படுத்த பழகி கொள்கிறோமோ
அன்றிலிறுந்து நம்மிடம் அமைதியும் என்றென்றும் மாறாமல் இருக்கும்.

No comments:
Post a Comment